• முகப்பு
  • ஆன்மீகம்
  • மகா மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.

மகா மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.

இளவரசன்

UPDATED: May 21, 2023, 11:16:37 AM

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 48 பெருமங்கலம் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா அந்த 19ஆம் தேதி தொடங்கி காவடி அபிஷேகம் பால்குடம் அபிஷேகம் அன்று மதியம் காஞ்ச வார்த்தல் மற்றும் சந்தன காப்பு தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து மறுநாள் காஞ்சி வார்த்தல் மாவிளக்கு அர்ச்சனை எனத் தொடர்ந்து நடைபெற்றது திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக இன்று அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது.

அம்மன் இன்னிசை நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கிராமத்தின் ஒவ்வொரு வீதிக்கும் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் திரண்டு அம்மன் மீதும் பக்தர் மீதும் மஞ்சள் நீர் தெளித்து வீட்டு வாசல்களில் வண்ணக் கோலங்கள் இட்டு அம்மனை வரவேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended