Author: THE GREAT INDIA NEWS

Category:

திருவாரூர் : மன்னார்குடி பந்தலடியில் புதன்கிழமை மாலை எஸ் கே காமராஜ் தலைமையில் திமுக அரசை கண்டித்து அமமுக கட்சியினர் தெருமுனை கூட்டம். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தேர்தல் வாக்குறுதியான ஆயிரம் ரூபாய் வழங்காததை கண்டித்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் , நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் டாஸ்மாக்கை மூடக்கோரியும் இந்த தெருமுனை கூட்டம் கூட்டப்பட்டது. கூலித் தொழிலாளிகள் 700 ரூபாய் சம்பாதித்து டாஸ்மாக்கிற்கு 300 ரூபாய் பெட்ரோலுக்கு 200 ரூபாயும் செலவழித்தால், குடும்பத்தை எப்படி நடத்த முடியும் , குழந்தைகளை எப்படி நல்ல முறையில் பராமரிக்க முடியும் குழந்தைகளை எப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்க முடியும் , இவர்களை அரசு பள்ளியில் மட்டும் தான் படிக்க வைக்க முடியும், எனவே டாஸ்மாக் உடனடியாக மூடப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர். நீட் தேர்வை ரத்து செய்யவும், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவும் , விலைவாசியை குறைக்கவும் திமுகவால் முடியாவிட்டால் பதவி விலக வேண்டும், டிடிவி தினகரன் ஆட்சிக்கு வந்தவுடன் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். இக்கூட்டம் ஆமமுக கட்சியினருக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிக்காரர்களும் எங்களுடன் சேர்ந்து போராட வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி செய்தியாளர் எஸ். வீரமணி. இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் திருவாரூர்,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,crime news,Latest tamil news,Breaking tamil news,Mayuladuthurai News,Ammk Party,ttv dinakaran,District news

Tags:

Comments & Conversations - 0