ஒரே பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 8, 2023, 7:43:55 PM
புஞ்சை புளியம்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.சி மெட்ரிக் பள்ளியில் 12 ம் வகுப்பு தேர்வில் 585 மதிப்பெண்கள் எடுத்து மாணவி பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள எஸ் ஆர் சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 125 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி யாவணா ஶ்ரீ 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் மஹாவிஷ்ணு என்ற மாணவன் 577 மதிப்பெண்களும், மூன்றாம் இடத்தில் ஹரீஸ் என்ற மாணவன் 569 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்த தேர்வில் மாணவர்கள் 79 பேரும், மாணவிகள்46 பேரும் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களை எஸ் ஆர் சி பள்ளி தாளாளர் பழனிச்சாமி மற்றும் நிறுவனர் செல்வராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர் வாழ்த்தி பாராட்டினர்.