அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி. சென்னை மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!
வாசுதேவன்
UPDATED: May 5, 2023, 1:21:57 PM
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தேசிய தலைவர் முகமது அனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் வழக்கறிஞர் பத்திரிகையாளர் எம். முகமது அனஸ் உத்தரவின் படி, தேசிய , தமிழ்நாடு மாநில நிர்வாகத்தின் ஒப்புதலோடு சென்னை மாவட்ட தலைவர் கே. மணிமாறன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சியின் இரண்டாம் கட்ட மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட இணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி. முத்துராமன்,
மாவட்ட துணைத் தலைவர் ஏ.தாமஸ், மாவட்ட செயலாளர் பி.பிரபு, மாவட்ட செயலாளர் எம்.சதீஷ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மரியசூசை, மாவட்ட துணைச் செயலாளர் ஆர். குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகிகள் பணி சிறக்க கட்சியின் தேசிய, மாநில நிர்வாகத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தேசிய தலைவர் வழக்கறிஞர் எம். முகமது அனஸ் கூறியதாவது அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி அனைத்து சமூகத்திற்கும் சொந்தமான பொதுவான சமூக சேவையை முதன்மை நோக்கமாக கொண்ட தேசிய கட்சி ஆகும்.
இதில் அனைத்து தரப்பு மக்களும் இணையலாம் . கட்சியின் அனைத்து பொறுப்புகளுக்கும் வரலாம். நாட்டில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் பொது அழைப்பினை கொடுப்பதாக கூறினார்.
மேலும் தகவல் அறிந்து கொள்ள 9944353150 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.