• முகப்பு
  • குற்றம்
  • நாகை அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர்களை பிடிக்கச் சென்ற போலீசாரின் செல்போனை திருடி வைத்துக் கொண்ட சாராய வியாரிகள்.

நாகை அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர்களை பிடிக்கச் சென்ற போலீசாரின் செல்போனை திருடி வைத்துக் கொண்ட சாராய வியாரிகள்.

செ.சீனிவாசன்

UPDATED: May 17, 2023, 7:50:07 PM

நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியல் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் போலீசார் பிரகாஷ் மற்றும் மாஸ்கோ இருவரும் சாராய வியாரிகளை பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ராமாபரம் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த சாராய வியாபரிகள் சரவணன், மற்றும் தங்கம் என்கின்ற வினோத் இருவரும் போலீசாரை கண்டு வயல் பகுதிகளில் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

அப்போது தாங்கல் வந்த இருச்சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரயாய வியாபாரிகளை துரத்திச் சென்றனர்.

அப்போது அங்குவந்த சாராய வியாபாரிகளின் உறவினர்கள் இருச்சக்கர வாகனத்தில் இருந்த காவலர் பிரகாஷ் என்பவரின் இரண்டு செல் போன்களை திருடி வாய்க்கால் புதருக்குள் ஒளித்து வைத்துள்ளனர்.

தப்பிச் சென்ற சாராய வியாபரிகளை பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வதற்காக செல் போனை தேடிய போது செல் போனை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செல் போனை திருடியதை சொல்லாமல் போலீசாரை சுமார் ஒரு மணி நேரம் அலைய விட்டுள்ளனர். இது குறித்து காவல் ஆய்வாளர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டு உதவி ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் விசாரித்தும் செல் போனை கொடுக்காமல் அலைய விட்டதால் ஆத்திரமடைந்த அவர் எல்லோர் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதை தொடர்ந்து திருடி ஒளித்து வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் எடுத்துக் கொடுத்தனர்.

அதன் பிறகு கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். நாகை அருகே சாராய வியாபாரிகளை பிடிக்கச் சென்ற போலீசாரின் செல் போனை திருடி வைத்துக் கொண்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக அலைய விட்ட சம்மவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended