• முகப்பு
  • திருவாரூர் நகராட்சியில் 10 வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக்கொண

திருவாரூர் நகராட்சியில் 10 வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக்கொண

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் நகராட்சியில் உள்ள மொத்தம் 30 வார்டுகளில் 23 வார்டுகளில் திமுகவும், ஒரு வாட்டில் காங்கிரசும், 3 வார்டில் அதிமுகவும், ஒரு வார்டில் சுயேட்சையும் வெற்றிபெற்ற நிலையில் கடந்த மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 29 நகர்மன்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். திருவாரூர் நகராட்சி தேர்தலில் 10 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தட்சிணா மூர்த்தி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக பதவியேற்புக்கு வரவில்லை. இதனால் அன்றைய தினம் 29 கவுன்சிலர்கள் மட்டுமே பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இன்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  பிரபாகரன் அதிமுக உறுப்பினர் தெட்சிணாமூர்த்திக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உறுதி மொழியை கூறி முடித்த தெட்சிணாமூர்த்தி தனது வார்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அவர்களுக்கு உண்மையாக நடந்துகொள்வேன் என்றும் கூறினார். மேலும் தனது வார்டுக்குட்பட்ட பகுதியான கல்தேர் அருகில் உள்ள போரை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தார். ஆணையரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended