• முகப்பு
  • tamilnadu
  • சென்னையில் வழக்கறிஞர் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் வழக்கறிஞர் மாணவி தூக்கிட்டு தற்கொலை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மதுரவாயல் தனியார் கல்லூரியில் படித்துவந்த வழக்கறிஞர்மாணவி தூக்கிட்டு தற்கொலை. திருமணமான இவருக்கு இரண்டுவயதில் ஒரு குழந்தை உள்ளது. சென்னையில் அமைந்தகரை பி.பி.தோட்டத்தை சேர்ந்தவர் கலை வேந்தன். மென்பொருள் பொறியாளரான இவர் சென்னையில் அம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த பிரியதர்ஷினி என்றபெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். கடந்தமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்செய்து கொண்ட இந்ததம்பதிக்கு இரண்டு வயதில் ஒருகுழந்தை உள்ளது. திருமணத்திற்குப்பின்னரும் பிரியதர்ஷினி மதுரவாயலில் இருக்கும் தனியார்கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவில் வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் பிரியதர்ஷினி. அவரின் கணவர் இதுகுறித்து அமைந்தகரை போலீசில்புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பிரியதர்ஷினி உடலைமீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குபோலீசார் அனுப்பிவைத்திருக்கின்றனர். திருமணமான மூன்றாண்டுகளிலேயே தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டதால் கணவன்மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்திருக்கலாம் என்றகோணத்தில் போலீசார்விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்கொலைக்கு முன்பாககணவனுக்கும் மனைவிக்குமிடையே தகராறுநடந்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து போலிசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்.

VIDEOS

RELATED NEWS

Recommended