• முகப்பு
  • அரசியல்
  • திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அ.தி.மு.க.வுக்கு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்!

திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அ.தி.மு.க.வுக்கு, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 31, 2023, 7:20:16 PM

திருநெல்வேலி புறநகர் மாவட்டம், மானூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களின் அ.தி.மு.க. சார்பில், இந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட, சுத்தமல்லி, எட்டாங்குளம், பார்வதியா புரம் என்ற கானார்பட்டி, கங்கை கொண்டான் ஆகிய ஊர்களில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று (மே.31) நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் "தச்சை" என்.கணேசராஜா, தலைமை வகித்தார்.

கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்கள், அ.தி.மு.க. மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் கங்கை முருகன் ஆகியோர் முன்னிலையில், அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended