திருக்குடமுழுக்குப் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் ஆகியவற்றின் திருக்குடமுழுக்குப் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து, தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.6.22) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர்கள் சி. கல்யாணி, திரு.சீ. செல்வராஜ், துணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்