அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் நல ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலுார் மாவட்டடம் பாடாலுாரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் விடுதி மற்றும் பெரம்பலுாரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் திருமதி எஸ்.மதுமிதா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.06.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பொருட்களின் தரம்குறித்தும், அரசால் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்ட ஆணையர் அவர்கள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவிகளுகள் மாலை நேரங்களில் படிப்பதற்கு ஏற்ற வகையில் அறை தயார் செய்து கொடுக்கவும், மாணவ-மாணவிகளுக்கு எந்த குறையுமின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும், விடுதி காப்பபாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
மேலும், உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா எனவும், விடுதியில் குடிநீர், தங்கும்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்று பார்வையிட்ட ஆணையர் அவர்கள், விடுதிகளில் பதிவேடுகள் முறையகா பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஜஹாங்கீர்.