• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உதகை ஏ.டி.சி. யில் இருந்து ராகவேந்திரா கோவில் முனிஸ்வரன் கோவில் வழியாக ரோஜா பூங்கா செல்லும் சாலையில்  நிறுத்தபடும் வாகனங்களால் வாகன நெரிசல்.

உதகை ஏ.டி.சி. யில் இருந்து ராகவேந்திரா கோவில் முனிஸ்வரன் கோவில் வழியாக ரோஜா பூங்கா செல்லும் சாலையில்  நிறுத்தபடும் வாகனங்களால் வாகன நெரிசல்.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 26, 2023, 7:28:52 PM

நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி. யில் இருந்து லாரி நிறுத்தம் ராகவேந்திரா கோவில் முனிஸ்வரன் கோவில் வழியாக ரோஜா பூங்கா செல்லும் சாலையில் சாலையில் நிறுத்தபடும் வாகனங்களால் தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

பல வாகனங்கள் ஆண்டுகணக்காக நிறுத்தபட்டு உள்ளது இதில் சில இடங்களில் இருபுறமும் வாகனங்களை சிலர் நிறுத்தி சென்று விடுகின்றனர் 

சில நாட்களாக இந்த சாலையில் மாலைநேரங்களில் தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

ரோஜா பூங்காவிற்கு தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இந்த வாகன நெரிசல் தொடர்கிறது.

ரோஜா பூங்கா செல்லும் வழியில் போக்குவரத்து காவலர் யாரும் இல்லாததால் பொதுமக்களே நின்று வாகன நெரிசலை சரிசெய்தனர்.

இந்த சாலையில் நிறுத்த படும் வாகனங்களை முறை படுத்தவேண்டும் ஆண்டுகணக்காக நிறுத்த பட்டு உள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.

இந்த இடத்தில் போக்குவரத்து காவலரை மாலை நேரங்களில் நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended