நடிகை மும்தாஜ் வீட்டில் சிறுநீர் மற்றும் இரண்டு இளம் பெண்களை போலீசார் மீட்டனர் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நடிகை மும்தாஜ் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மறுப்பதாக அவரது வீட்டில் வேலை செய்து வரும் வடமாநில இளம் பெண்கள் இருவர் புகார் அளித்த நிலையில் அவர்கள் போலீசாரால் மீட்கப் பட்டுள்ளனர்.
படவாய்ப்புகள் இல்லாமல் தற்போது அண்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார் நடிகை மும்தாஜ் , இவரது வீட்டில் பீகாரை சேர்ந்த ஒரு சிறுமி உள்பட 2 இளம் பெண்கள் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அளித்த புகாரில் மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய தங்களுக்கு விருப்பமில்லை என்றும், அவர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மறுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் மீட்டு ஷெனாய் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்