- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்மிடிப்பூண்டி அருகே சாலை சிமெண்ட் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே சாலை சிமெண்ட் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகேஷ் குமார்
UPDATED: May 11, 2023, 5:34:26 AM
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் மகாலிங்க நகரை சேர்ந்தவர் மகேஷ் 34 வயது நிரம்பிய இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் எளாவூரில் இருந்து பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் மகேஷ் சென்று கொண்டிருந்தபோது கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையின் நடுவே உள்ள சிமெண்ட் தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மகேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.