பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை.
இடும்பன்
UPDATED: May 11, 2023, 12:22:26 PM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொஞ்சி குப்பத்தைச் சேர்ந்த சதானந்தம் மனைவி ராதா (34 ) கடந்த 28-7-2022 அன்று பலா தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காடாம்புலியூரைச் சேர்ந்த தனசேகர் மகன் பிரகாஷ் (28) ராதா அணிந்திருந்த 2 1/2 பவுன் நகை மற்றும் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றார்.
இது குறித்த புகாரின் பேரின் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ராதாவிடம் நகை பறித்த பிரகாஷுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 2000 அபராதம் அளித்தும் நீதிபதி மகேஷ் தீர்ப்பு வழங்கினார்.