• முகப்பு
  • குற்றம்
  • கும்பகோணம் அருகே இன்னம்பூர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கும்பகோணம் அருகே இன்னம்பூர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

ரமேஷ்

UPDATED: May 10, 2023, 7:53:59 PM

கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார்.

அப்போது, அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில், அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கரு கலைப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended