அழகாபுத்தூரில் இரு சக்கர வாகனம் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்து.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த தினேஷ் (25) பிரகாஷ் (26)மற்றும் மணிகண்டன் (30)ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் குடவாசலில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று மாலை வந்தனர்.
இவர்கள் அழகாபுத்தூர் அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தினேஷ், பிரகாஷ், ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் இருசக்கர வாகனம் பயணம் செய்த மணிகண்டன் என்பவருக்கு பலத்த காயம் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
விபத்து குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சாலை விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்
மேலும் அப்பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
பேட்டி: ரமேஷ் அழகாபுத்தூர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்