குடிபோதையில் இருந்த பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்து நடத்துநர் பிச்சைபெருமாள்(56) என்பவரை, குடிபோதையில் இருந்த பயணி தாக்கியதுல் உயிரிழந்தார்.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்துநர் குடும்பத்திற்கு 10இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ,வைக்கப்பட்டுள்ள பிச்சை பெருமாள் உடலுக்கு மாலை அணிவித்து , 10இலட்ச ரூபாய் நிதி உதவியை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.