• முகப்பு
  • குற்றம்
  • பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றவன் சிறையில் அடைப்பு.

பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றவன் சிறையில் அடைப்பு.

இடும்பன்

UPDATED: May 9, 2023, 7:37:40 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடு மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி திடீரென காணாமல் போனார் இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை எனவே மாணவியின் தந்தை காடாம்புலியூர் காவல் நிலையத்தில் 4-5-23 அன்று புகார் கொடுத்தார்.

புகாரில் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான 30 வயதுடைய சிவசங்கர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியூர் தப்பி செல்ல முயன்ற சிவசங்கரை போலீசார் பண்ருட்டியில் சுற்றி வளைத்து கைது செய்தனர் பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended