Author: THE GREAT INDIA NEWS

Category: district

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பருத்தி கொள்ளை என்ற பகுதியில் உத்திரமேரூர் மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் சென்ற கொண்டிருந்த அடையாளம் தெரியாத நரிக்குறவர் மீது வேகமாக வந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து மோதிய விபத்தில் நரிக்குறவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்திரமேரூர் டு செங்கல்பட்டு சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் அடையாளம் தெரியாத நரிக்குறவரின் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தினால் உத்திரமேரூர் டு செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நரிக்குறவரின் சடலத்தை உத்திரமேரூர் காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நரிக்குறவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காண முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalkanchipuramtamilnadu #indrayaseithigalkanchipuram #todaynewskanchipuramtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kanchipuramtodaynews #kanchipuramlatestnews #kanchipuramnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0