• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த தனியார் பேருந்து தானாக எஞ்சின் ஸ்டார்ட் ஆகி ஓடியதில் பயங்கர விபத்து.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த தனியார் பேருந்து தானாக எஞ்சின் ஸ்டார்ட் ஆகி ஓடியதில் பயங்கர விபத்து.

செ.சீனிவாசன்

UPDATED: May 13, 2023, 4:59:05 AM

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்காலில் இருந்து திருவாரூர் செல்லக்கூடிய தனியார் பேருந்து வந்தது.

அடுத்த பயணத்திற்கு கால அவகாசம் இருந்ததால் பேருந்தின் ஓட்டுநர் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பேருந்து இன்ஜினை நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ சாப்பிட சென்றுள்ளார். அப்போது சில பயணிகள் பேருந்தில் ஏறி உள்ளனர்.

அப்போது திடீரென பேருந்து இன்ஜின் ஸ்டார்ட் ஆகி பேருந்து ஓட தொடங்கியது. இதில் பேருந்து நிலையத்தில் வெள்ளரி பிஞ்சு வியாபாரம் செய்யும் வடவூர் பகுதி சேர்ந்த தங்கையன் என்ற முதியவர் மீது பேருந்து மோதியது.

இதில் தங்கையன் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த நிலையில் திருச்சி செல்வதற்காக நின்று இருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி நின்றது.

இதில் நல்வாய்ப்பாக பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended