• முகப்பு
  • லாட்டரி டிக்கெட் விற்ற நபரை தனிப்படை போலீசார் அதிரடி கைது.

லாட்டரி டிக்கெட் விற்ற நபரை தனிப்படை போலீசார் அதிரடி கைது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஜெயங்கொண்டம் புது நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கேசவன் , தந்தை கண்ணன் , கேசவன் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தை சேர்ந்தவர் . இவர் தினந்தோறும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் தனிப்படை போலீசார் பாண்டியன் மற்றும் காவலர்கள் ரகசியமாக நின்று கண்காணித்தபோது, ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் கேசவன் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக எடுத்து வந்த நிலையில், டிக்கெட் வாங்குவது போல் நடித்து போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி உதவி ஆய்வாளர் சுபிக்ஷா வழக்குப்பதிவு செய்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் கடலூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,today tamil news,chennai news,news,cudaloore news,lottery ticket,crime news,police news

VIDEOS

RELATED NEWS

Recommended