• முகப்பு
  • political
  • நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மணிக்கூண்டு திடலில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ. மணிக்கண்ணன் மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் மற்றும் முன்னாள் அமைச்சர் தலைமை கழக பேச்சாளர் பழனியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டு திமுக ஆட்சி ஏற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருவதால் கிராமங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன . திமுக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை பற்றி விளக்கி பேசினார்கள். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் சமூக நீதியோடு செயல்பட்டு வருவதாக கூறினார்கள் , இதில் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு நகர செயலாளர் டேனியல்ராஜ் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended