கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது .
இதில் அவர் கூறியதாவது குறிப்பாக சிதம்பரம் ஒரு ஆன்மீக பூமி இந்த ஆன்மீக பூமியில் அடிப்படை வசதிகள் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்றும் சிதம்பரத்தில் குறைந்த வாடகையில் ஒரு திருமண மண்டபம் மற்றும் விடுதி விரைவில் கட்டப்படும் என்று கூறினார்.
முப்பத்திமூன்று வார்டில் உள்ள குறைகளை கேட்டறிந்தார் , உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகள் எல்இடி லைட் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.