- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு.
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு.
இடும்பன்
UPDATED: May 9, 2023, 1:33:45 PM
பண்ருட்டி அருகே கிழக்கு மேட்டுக்குப்பம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி காமதேனு (வயது 38) தனது தாய் தனவள்ளியுடன் நடுகுப்பத்தில் இருந்து கீழகுப்பம் நோக்கி நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் காமதேனு, தனவல்லி படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு மருங்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமதேனு உயிரிழந்தார்.
மேலும் இதில் படுகாயம் அடைந்த தனவள்ளி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.