• முகப்பு
  • குற்றம்
  • ஒரு மாதத்திற்கு முன்பு திருநங்கையாக மாறிய இளம் திருநங்கைக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து அருவாள் வெட்டு. 

ஒரு மாதத்திற்கு முன்பு திருநங்கையாக மாறிய இளம் திருநங்கைக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து அருவாள் வெட்டு. 

லட்சுமி காந்த்

UPDATED: May 19, 2023, 9:38:05 AM

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது. 

இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்கமாக நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய காவலர்கள் பாதுகாப்புக்கு இல்லாததாலம், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

பேருந்து நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பேருந்து நிலையத்துக்கு , வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும் , பொதுமக்களிடமும், மாணவ மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதம் முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக உருமாறி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பேருந்து நிலையத்தின் உள்ளே மாஸ்க் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் அஞ்சலி திடீரென அஞ்சலி மீது பாய்ந்து கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

அஞ்சலையின் கதறலை கண்டு பேருந்து நிலையத்தில் இறந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து நிலையத்தின் உள்ளே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended