• முகப்பு
  • குற்றம்
  • அரசு மதுபான பாரில் மது வாங்கி குடித்த ஒருவர் உயிரிழப்பு. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை.

அரசு மதுபான பாரில் மது வாங்கி குடித்த ஒருவர் உயிரிழப்பு. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 21, 2023, 11:51:50 AM

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதனை வாங்கி குடித்த குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அடுத்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended