சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அனுப்பி அடக்குமுறையை பின்பற்றுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு கடிதம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை விடுத்திருந்தது. அந்த உத்தரவில் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து வரும் சூழ்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீறும் வகையில் கோவில் தொடர்பாக அரசு பல்வேறு நோட்டீஸ்களை அனுப்பி வருவதாகவும், நேற்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பி அடுத்த மாதம் கோவிலை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் உள்ளே 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அனுப்பி அடக்குமுறையை பின்பற்றுவதாக இந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.