ஸ்ரீமுஷ்ணம் அருகே கார்மாங்குடி கிராமத்தில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் கார்மாங்குடியில் இன்று மதியம் 3.00 மணிக்கு திடீரென நரையான் என்கிற தனபால் வீடு தீப்பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததில் வீட்டில் வைத்திருந்த கிரைண்டர் மிக்ஸி டிவி மற்றும் உபயோகப் பொருட்கள் அனைத்தும் சுமார் இருபது நிமிடத்துக்குள் எரிந்து நாசமானது.
தீ முழுவதும் பரவியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர், ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மக்கள் தவித்தனர்.
இந்நிலையில் விருத்தாசலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதுமாக தீக்கரையானதால் வீட்டில் இருந்த டிவி , சேர் விலை உயர்ந்த சேலைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்ஙரையானது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்