• முகப்பு
  • crime
  • பிரபல டாட்டூ நிபுணர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை. கஞ்சா வாலிபரின் வெறிச்செயல் . ஒரு பெண் உட்பட 3 பேர் கைது. காஞ்சியில் பரபரப்பு.

பிரபல டாட்டூ நிபுணர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை. கஞ்சா வாலிபரின் வெறிச்செயல் . ஒரு பெண் உட்பட 3 பேர் கைது. காஞ்சியில் பரபரப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 63) . அவருக்கு அமுதா (வயது 48) என்ற மனைவியும் சவுமியா (வயது 30) என்ற மகளும் சரண்சிங் (வயது 26) என்ற மகனும் உள்ளனர். சரண்சிங் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடையும் ,வணிகர் வீதியில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார் . இவர் வீட்டுக்கு அருகே கணவனை இழந்த சித்ரா (வயது 45) , தன் மகன்கள் விஷ்ணு (வயது 24) மற்றும் சிவா (வயது 23) ஆகியோருடன் வசித்து வருகிறார். விஷ்ணு குடும்பத்திற்கும் சரண்சிங் குடும்பத்திற்கும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 12 மணி அளவில் விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அறிவழகன் மற்றும் அமுதாவிடம் தகராறு செய்துள்ளனர். தகவலறிந்து தனது வீட்டிற்கு வந்த சரண்சிங் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆவேசமடைந்த விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் தாயார் சித்ரா, தம்பி சிவா மற்றும் 3 நண்பர்கள் என மொத்தம் 6 பேர்கள் சேர்ந்து கொண்டு சரண்சிங் மற்றும் அவரின் குடும்பத்தினரை கடுமையாக தாக்க தொடங்கினர். மேலும் சித்ரா கொண்டு வந்த கொடுத்த கத்தரிக்கோல் மற்றும் ஸ்குரு டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் வாங்கிய விஷ்ணு கஞ்சா போதை தலைக்கேற சரண் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பலமாக குத்தினார் . அதில் படுகாயமடைந்த சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்த விஷ்ணு என்பவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்றும், இன்று வேண்டும் என்றே தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து விட்டு சரண் சிங்கை கொலை செய்யும் எண்ணத்தில் திட்டமிட்டிருந்ததார்கள் என கூறப்படுகிறது. மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் அதிகமாக சரண்சிங் வீட்டருகே சத்தமிட்டதாலும், விஷ்ணுவின் பாட்டி பாக்கு இடிக்கும் சிறிய உரலில் பாக்கு வைத்து இடித்ததாலும் ஏற்பட்ட சத்தங்களை தொடர்ந்து சரண்சிங் விஷ்ணு குடும்பத்தினரிடம் கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் நேரில் விசாரணை செய்து கொலை செய்த விஷ்ணு, அவருடைய தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய மூன்று பேர்களையும் மருத்துவமனையில் வைத்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் இளம் வாலிபர்கள் இடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது .அதனைத் தொடர்ந்து பல இடங்களில் அடிதடி வெட்டுகுத்து போன்றவையும் நடைபெற்று வருகிறது.கஞ்சா போதையால் தான் இந்த கொலை சம்பவமும் நடந்தேறியுள்ளது. வளர்ப்பு நாய் சப்தமிட்டதை தட்டிக்கேட்ட டாட்டூ நிபுணர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended