இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதி விபத்தில் மரணம்.

அருண்

UPDATED: May 17, 2023, 7:01:24 PM

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மேல குன்னூர் பட்டி பகுதி சேர்ந்தவர் கணேசன் இவர் தனது ஊரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உறவினர்களை அழைப்பதற்காக தனது உறவினர் கார்த்திக் மற்றும் கணேசன் ஆக இருவரும் இருசக்கர வாகனத்தில் கொத்தம்பட்டி நோக்கி சென்றுள்ளனர். 

இருசக்கர வாகனத்தை கார்த்தி ஓட்டியுள்ளார் கணேசன் பின்னல் அமர்ந்துள்ளார் வாகனம் துறையூர் முசிறி ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த கணேசன் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக கார்த்திக் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து நிலைமை மோசமாக இருப்பதாக வும் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இது குறித்து துறையூர் காவல்துறையினர் காரில் வந்தவர்களை விசாரணை செய்த போது காரில் வந்தவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் விழுப்புரத்தில் நடைபெறும் கட்சி விழாவிற்காக செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார்.

இது தொடர்ந்து காரில் வந்த சதீஷ், சுரேந்தர், கதிரவன், சித்தர் வளவன், தமிழ்மணி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களும் லேசான காயங்களுடன் துறையூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவான கார் ஓட்டுநரை துறையூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended