Author: THE GREAT INDIA NEWS

Category: india

கர்நாடகாவில் குடிப் பழக்கத்தில் இருந்துவிடுபட வைக்கும்மருந்தை தவறுதலாக சாப்பிட்டசிறுவன் பலியானசம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாமாநிலம், கலபுரகிமாவட்டம், சித்தாப்புராதாலுகா வாடிடவுனை சேர்ந்தவன் விஷ்ணு ஜாதவ் ( 8). இவன் அப்பகுதியில் உள்ளபள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின்தந்தை அதிலிருந்து விடுபட மருந்து, மாத்திரைகளை பயன் படுத்தி வந்தார். இந்நிலையில் அந்தமருந்தை மிளகாய்பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தைதடவி வைத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மருந்துத்தடவி இருந்தமிளகாய் பஜ்ஜியை, விஷ்ணுசாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவனுக்கு வாந்தி,மயக்கம் உண்டானது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவைமீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்ணு இறந்துவிட்டான். இச்சம்பவம் குறித்து வாடிபோலீசார் நடத்தியவிசாரணையில் மருந்துதடவிய பஜ்ஜியைதவறுதலாக சாப்பிட்டதால் விஷ்ணு இறந்ததுதெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்துவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0