பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பா.ஜ.க பிரமுகர் செய்தி சேகரிப்பதற்காக நின்ற பெண் பத்திரிகையாளரிடம் சில்மிஷம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாரத பிரதமர் மோடியை வரவேற்ககாத்திருந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் செய்திசேகரிப்பதற்காக நின்றபெண் பத்திரிகையாளரிடம் தகாதமுறையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுவாமி சிவானந்தசாலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகுறித்து பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பா.ஜ.கவை சேர்ந்தபிரமுகர் பெண் செய்தியாளரிடம் தவறாகநடந்து கொண்டதாக சக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்திசேகரிக்க விடாமல்தடுத்ததுடன் அவர் கையில்வைத்திருந்த மைக்கைபிடுங்கி தகாத முறையில் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
அந்த பா.ஜ.க பிரமுகரின் பெயர் என்ன வென்று தெரியவில்லை எனக்கூறும் பத்திரிகையாளர்கள், அவரது புகைப் படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கின்றனர்.
பா.ஜ.க பிரமுகரின் இச்செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அவர்கள் தெரிவித்து உள்ளதாவது, "பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சென்னைவருகையை செய்தி சேகரிக்கச்சென்ற பெண்செய்தியாளரிடம் படத்தில் உள்ள பா.ஜ.க பிரமுகர்கீழ்த்தரமாக நடந்துள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க இவர் யார் என்று சொல்லமறுக்கிறது. மாநிலத்தலைவர் அண்ணாமலை இது குறித்து பதிலளிக்கவேண்டும்.
தமிழ்நாடு காவல்த்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்." எனக்குறிப்பிட்டு உள்ளது.
செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி