- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருப்பாச்சூரில் தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் காயம்- மருத்துவமனையில் அனுமதி.
திருப்பாச்சூரில் தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் காயம்- மருத்துவமனையில் அனுமதி.
சுரேஷ்பாபு
UPDATED: May 14, 2023, 6:54:05 AM
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் தாட்கோ நகரில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு சாதனா (10) என்ற மகளும், நித்தீஷ்குமார் (8), சூர்யா (6) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த தாட்கோ நகரில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.
இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றவையாக மாறியுள்ளது.
எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்து தரும்படி இங்குள்ள பொதுமக்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட கலெக்டர் என அனைத்து அரசு அலுவலர்களுக்கும் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில் 13.5.2023 காலை வழக்கம் போல் மோகன்ராஜூம், சுமித்ராவும் எழுந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். மூத்தமகன் நித்தீஷ்குமார் கடைக்கு சென்றுள்ளான். இந்நிலையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யா (7) மீது வீழுந்ததில் அவன் காயம் அடைந்தான். இதனையடுத்து உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இனியாவது அந்த தொகுப்பு வீட்டை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.