• முகப்பு
  • குற்றம்
  • பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 20 வயது இளைஞன்.

பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 20 வயது இளைஞன்.

இடும்பன்

UPDATED: May 21, 2023, 9:18:59 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள திருவாமூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் மகன் சிவக்குமார் (20) வீட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் சாராயமும் 25 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended