Author: THE GREAT INDIA NEWS

Category: crime

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கலைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது பள்ளி சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் பாபுஜி என்ற எழுபது வயது முதியவர் பாலியல் தொந்தரவு செய்து , திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாகவும் இது குறித்து கேட்ட பள்ளி சிறுமியின் குடும்பத்தினரை பாபுஜி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்தி வரும் 70 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கழைக்கூத்தாடி சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி.சுரேஷ்

Tags:

#pocso #pocsoact #childabuse #kallakurichinews #kallkurichinewstamil #kallakurichinewspaper #kallakurichinewschannel #kallakurichinewsyesterday #kallakurichinewslive #kallakurichimavattamnews ##இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews
Comments & Conversations - 0