• முகப்பு
  • crime
  • நாயை காவலுக்கு வைத்து விட்டு காய்கறி கடைக்குள் புகுந்து திருடிய 15 வயது சிறுவன்.

நாயை காவலுக்கு வைத்து விட்டு காய்கறி கடைக்குள் புகுந்து திருடிய 15 வயது சிறுவன்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் ராஜா என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார், இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்து பார்த்த பொழுது கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு சிதறி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா பணப் பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த 5 ஆயிரம் ரொக்கப் பணத்தை காணவில்லை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை பார்த்தபோது , நள்ளிரவு 12-மணியளவில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், தன்னுடன் வந்த நாயை கடையின் வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு , கடைக்குள் புகுந்து பணப் பெட்டியில் இருந்த ரூ. 5000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து ராஜா சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் நகராட்சி வணிக வளாகத்தின் வெளியே, நாயை காவலுக்கு வைத்துவிட்டு சிறுவன் கடைக்குள் புகுந்து திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி,இன்றைய முக்கிய செய்திகள் கள்ளக்குறிச்சி,இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,Kallakurichi news,A 15-year-old boy who stole a dog and stole it from a vegetable shop

VIDEOS

RELATED NEWS

Recommended