- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தம்பதியினரின் காணாமல் போன 10 வயது சிறுவன்
திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தம்பதியினரின் காணாமல் போன 10 வயது சிறுவன்
மாரிமுத்து
UPDATED: May 29, 2023, 6:27:11 AM
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 10 வயது சிறுவனுடன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு இன்று (28.05.2023) வந்துள்ளனர். அப்போது அவர்களது 10 வயது சிறுவன் இன்று மாலை கோயில் வளாகத்தில் இருந்து காணாமல் போய் உள்ளார்.
இதுகுறித்து மேற்படி சிறுவனின் தந்தை திருச்செந்தூர் கோவில் புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் புறக்காவல் காவல் நிலைய போலீசார் சிறுவன் காணாமல் போனது குறித்து ஒலிப்பெருக்கி மற்றும் ரோந்து மேற்கொண்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கனகராஜ் மற்றும் காவலர் திரு. அசோக்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்ட போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தகுமாரபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவனை மீட்டு விசாரித்ததில் அச்சிறுவனால் சரிவர தகவல் சொல்ல முடியாததையடுத்து மேற்படி போலீசார் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு திருச்செந்தூர் கோவில் புறக்காவல் நிலையத்தில் அச்சிறுவன் குறித்து தகவல் கேட்டதில், ஏற்கனவே அந்த சிறுவன் புறக்காவல் நிலையத்தில் தேடி வந்த காணாமல் போன சிறுவன் என தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த சிறுவனின் பெற்றோரை தாலுகா காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு காவல் ஆய்வாளர் முரளிதரன் உத்தரவின்படி மேற்படி சிறப்பு உதவியாளர் கனகராஜ் மற்றும் காவலர் அசோக்குமார் ஆகியோர் அச்சிறுவனை பத்திரமாக அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.