நூதன முறையில் 8000 ரூபாய் திருட்டு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சோழபுரம் கடைவீதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார் ஜாகீர்உசேன். இவரிடம் இன்று மாலை, தன்னிடம் 8000 ரூபாய் அளவிற்கு சில்லரை காசுகளாக உள்ளது , பணம் கொடுத்தால் சில்லறையை தருகிறேன் எனக் கூறவும், ஜாகிர் உசேன் தனது கடையில் வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரிடம் 8000 ரூபாய் பணத்தை கொடுத்து வந்த நபருடன் அனுப்புகிறார் . வந்த நபர் ஸ்கூட்டரில் பிரகாஷை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றதும் ஒரு கோயில் வாசலில் நிறுத்திவிட்டு கோவிலில் பணம் இருக்கிறது கொண்டு வந்து தருகிறேன் என கூறி ,பிரகாஷிடம் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார். நீண்ட நேரம் காத்திருந்து பணம் வாங்கிய நபர் வராததால் நடந்த விபரத்தை கடை உரிமையாளர்களிடம் பிரகாஷ் கூறியுள்ளார். ஏமாற்றப்பட்டது குறித்து சோழபுரம் காவல்நிலையத்தில் வணிகர்சங்கம் சார்பில்புகார் கொடுத்துள்ளது. இதுபோல் வணிகர்கள் ஏமாற வேண்டாம் என சோழபுரம் வணிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்கள் சோழபுரம் பகுதியில் அதிகம் நடைபெறாமல் இருக்க , வணிகர் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் சோழபுரம் பகுதிகள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended