பாபநாசம் அருகே பண்டாரவாடையில் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி..
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 25, 2023, 7:32:28 PM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கோவில் தேவராயன்பேட்டையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
இதில் காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் வீரவணக்கம் கோஷங்கள் இட்டவாறு, மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் அன்னதான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.