• முகப்பு
  • india
  • மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் - அக்னிபத்

மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் - அக்னிபத்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுடில்லி: அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானத் துறையில் மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஜூன் 24ம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended