லோகோ ஓவியப் போட்டி ரூபாய் 50,000/- பரிசு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கான ‘லோகோ’ எனப்படும் புதிய அடையாள சின்னம் வடிவமைக்கும் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு, 50 ஆயிரம்ரூபாய் பரிசுவழங்கப்படுமென, வனத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களைவிரைந்து செயல்படுத்த, ‘பசுமைத்தமிழ்நாடு இயக்கம்’ துவக்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தின் செயல் பாடுகளை ஒருங்கிணைக்க, நிர்வாகரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. பசுமை இயக்கத்தின் அடிப்படைநோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அடையாளசின்னம் உருவாக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு, ‘டெண்டர்’ வாயிலாக தனியார்நிறுவனத்தை அணுகாமல், பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் போட்டியாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதன் படி, பொது மக்கள், வரைகலை வல்லுனர்கள், சிறப்பான அடையாளசின்னத்தை உருவாக்கி, ஜூலை 18 ம் ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் அடையாளசின்னத்தை உருவாக்கியவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல்விபரங்களை அறிய, www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

RELATED NEWS

Recommended