சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தபடும் 3 ஆயிரம் கிலோ வெல்லம் பறிமுதல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவலர்கள் இன்று மூலக்காடு பகுதியில் சாராய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக மூலக்காடு அருகே பாட்டையப்பன் கோவில் அடுத்த வனப்பகுதியில் மினி டெம்போ ஒன்று நின்று கொண்டிருந்தது அதனை சோதனை மேற்கொண்டததில் சாராயம் காய்ச்சுவதற்காக 3,000 கிலோ வெல்லம் இருப்பது தெரியவந்தது.
உடன் சாராயம் காய்ச்சுவதற்காக மினி டெம்போவில் இருந்த 3 ஆயிரம் கிலோ வெல்லம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மினி டெம்போ ஆகியவை பறிமுதல் செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தப்பி ஓடிய இருவர் மீது திருக்கோவிலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கள்ளகுறிச்சி செய்தியாளர் அஜய்குமார்.