பண்ருட்டி மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளுக்கு தீர்வு.

இடும்பன்

UPDATED: May 15, 2023, 7:22:06 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ராஜசேகரன் (ஓய்வு) தலைமையில் நடந்தது.

பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 241 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.68 லட்சத்து 87 ஆயிரத்து 417 வழங்க உத்தரவிடப்பட்டது.

ஏற்பாடுகளை பண்ருட்டி வட்ட சட்டபணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்த ஜோதி செய்திருந்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended