• முகப்பு
  • crime
  • 2 கோடி ரூபாய் மதிப்பிலான பெருமாள் மற்றும் மாரியம்மன் சிலைகள் !!!

2 கோடி ரூபாய் மதிப்பிலான பெருமாள் மற்றும் மாரியம்மன் சிலைகள் !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவர் கைது. இவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான பெருமாள் மற்றும் மாரியம்மன் சிலைகள் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. கைது செய்யப்பட்ட இருவரும் இதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு. கும்பகோணத்தில் விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது போல் நடித்து அந்த இரு சிலைகளையும் கைப்பற்றியதுடன், சிலைகளை விற்க முயன்ற மகிமைதாஸ் மற்றும் பச்சைமுத்து ஆகிய இருவரை கைது செய்தனர். ஒரு அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை, ஒன்னேகால் அடி உயரமுள்ள பெருமாள் சிலை ஆகியவை கைப்பற்றப்பட்டது. இச்சிலைகளை விற்க முயன்ற இருப்பை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகிமை தாஸ் மற்றும் பெரிய கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து இருவரையும் சிலை திருட்டு தடுப்பு வழக்கை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரு ஐம்பொன் சிலைகளையும் இதே நீதிமன்றத்தில் சிலை தடுப்பு காவல்துறையினர் ஒப்படைத்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended