குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 6 சிறுவர்கள் ஒன்றாக செருமங்கலம் பகுதியில் உள்ள உடையார் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
6 நண்பர்களும் குளித்துக் கொண்டிருக்கும்போது விஜய் மற்றும் டேனியல் ஆகிய இரண்டு பள்ளி சிறுவர்கள் மட்டும் ஆழமான பகுதிக்குச் சென்று நீருக்குள் சிக்கிக்கொண்டனர்.
மற்ற நான்கு நண்பர்களும் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் ஓடி வந்து குளத்தில் இறங்கி சிறுவர்களை தேடியுள்ளனர்.
ஆனால் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தநிலையில் வடுவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவர்களான மகேந்திரனின் தந்தை விஜய் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் மகேந்திரன் வடுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
டேனியலின் தந்தை தாஸ் பெயிண்டராக பணியாற்றி வருவதும் டேனியல் வடுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்களை கைப்பற்றிய வடுவூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காரைக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.