• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 14-வது பதவி ஏற்பு விழா....!!!

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 14-வது பதவி ஏற்பு விழா....!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2022 - 2023-ம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் 14-வது தலைவர்,செயலாளர், பொருளாளர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரி சங்க துணை ஆளுநர் இளங்கோவன் தலைமை தாங்கினார், இணை ஒருங்கிணைப்பாளர் சிவஞானசெல்வம், மற்றும் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாசப்ரிய அம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிதாக பொறுப்பேற்று கொண்ட ரோட்டரி சங்கத் தலைவர் தெய்வீகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாபு, ஆகியோரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். மேலும் பதவி ஏற்பு விழாவில், முதல் நலத்திட்ட உதவிகளாக108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆறு பேருக்கு ரெயின் கோட் மற்றும் வெள்ளையூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு தண்ணீர் ட்ரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அன்பழகன், சுரேஷ்குமார், முன்னாள் துணை ஆளுநர் திலீப், வின்சென்ட், சுப்பிரமணியன், ஜெய்சிங், அருள், கார்த்திகேயன், அன்பழகன், சாமிநாதன், ஜெகதீஷ், டாக்டர் ஸ்ரீனிவாசன், டாக்டர் ராஜேஷ், வசந்தகுமார், முத்துக்குமாரசாமி, ரமேஷ்பாபு,அபிராமி மோகன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended