11 அரிவாள் மீது பெண் நின்று ஆடிய நடனம்

செ.சீனிவாசன்

UPDATED: May 20, 2023, 4:51:34 AM

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்துடன் கூடிய ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

திருமண தடை போக்குவது, குழந்தை பாக்கியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் அமாவாசையை‌ முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்னதாக மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, அரிவாள் மீது பெண் ஒருவர் ஏறி நின்று நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை வீரன் முன்பாக தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாள் மீது ஏறி ‌ நடனமாடியதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

தொடர்ந்து அரிவாள்கள் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended